×

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த ₹10 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, ஜூன் 21: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பஞ்செட்டி பகுதியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத், உத்தரவின்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செல்லும் கார், லாரி, மினி ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக மினி லோடு ஆட்டோ சென்றது. இதையறிந்த கவரைப்பேட்டை போலீசார் பின் தொடர்ந்து சென்று லோடு ஆட்டோவை மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர், கிளீனர் ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகே இருந்த வயல்வெளி பகுதியில் இறங்கி தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது ₹10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிந்தது. பின்னர், வண்டியை பறிமுதல் செய்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு  கொண்டு வந்தனர். தப்பிச்சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...