மதுரை, ஜூன் 19: போலீஸ் வாகன சோதனையில் டயர் வியாபாரி இறந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் வாகன சோதனையில் போலீசார் லத்தியால் அடித்ததில் டயர் வியாபாரி விவேகானந்த குமார் இறந்தார். இதைத்தொடர்ந்து கணவன் இறந்த துக்கத்தால் மனைவி கஜப்பிரியா தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இறந்த விவேகானந்த குமாரின் இறப்பால் அவருடைய மனைவி தற்கொலைக்கு முயலும் அளவுக்கு நடந்த சம்பவம் அவரை கடுமையாக பாதித்துள்ளது. அவர் முழு சிகிச்சை பெற்று பூரணகுணமடைய வேண்டும். இது வேதனையான சம்பவம்.