×

மூன்றாம் முறையாக திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் இடமாற்றம்

திருமங்கலம், ஜூன் 19: திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்றாம் முறையாக இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டி கோட்டத்திலிருந்து திருமங்கலத்தை தனி வருவாய் கோட்டமாக தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி தாலுகாவை உள்ளடக்கி திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. தனி கோட்டமாக அறிவிக்கப்பட்ட உடன் திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு தாலுகா அலுவலகத்தில் மேல்மாடியில் இடம் ஒதுக்கப்பட்டு இயங்கியது. இந்நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொறுப்பு ஆர்டிஓவாக நியமிக்கப்பட்ட ஆர்டிஓ முருகேசன் உசிலம்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால் முழுமையாக ஆர்டிஓ அலுவலகம் செயல்படுவதில் சுணக்கம் ஏற்பட்டது. மக்களவை தேர்தல் முடிந்த பின்பு கடந்த ஜூன் 3ம் தேதி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மேல்மாடியிலிருந்து கீழ்தளத்திலுள்ள தனி தாசில்தார் அறைக்கு ஆர்டிஓ அலுவலகம் மாற்றப்பட்டு புதிய ஆர்டிஓ.வாக முருகேசன் பொறுப்பேற்றார். ஆனால் அந்த இடம் அலுவலக பணிக்கு போதுமானதாக இல்லை. பொதுமக்கள் அமரகூட இடமில்லாததால் புதிய கட்டிடம் கட்டி ஆர்டிஓ அலுவலகம் இயங்கும் வரையில் வேறு இடத்தில் அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகேயுள்ள ஜவகர் முதல் தெருவில் உள்ள தாசில்தார் குடியிருப்பு பகுதிக்கு தற்போது திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் செயல்பட்டு வருகிறது. மூன்றாவது முறையாக இடம் மாற்றப்பட்ட செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்திலாவது தொடர்ந்து திருமங்கலம் ஆர்டிஓ இயங்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.




Tags : Thirumangalam RTO ,office ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...