இரண்டு இன்ஸ்பெக்டர்கள்

பொறுப்பேற்புசேலம், ஜூன் 19: சேலம் போலீஸ் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி, சேலம் மாவட்ட கொடுங்குற்ற தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டார். அவர், எஸ்பி அலுவலகத்தில் உள்ள அந்த பிரிவில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், கூடுதலாக மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பையும் கவனிக்கிறார். இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கற்பகம், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நியமிக்கப்பட்டார். அங்கு அவர், பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories: