×

சூதாடிய 4பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூன் 19: தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருதுக்கோட்டை சம்மந்தகோட்டை இடையே உள்ள செங்கல் சூளையில் சூதாடிக்கொண்டிருந்த சாலிவாரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(34), சம்பத்குமார்(32), ஒசூர் டிவிஎஸ்நகர் கார்த்திக்(32), ராஜா(48) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ₹1110 பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற சின்னசாமி, கோவிந்தராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது