நீடாமங்கலம்,ஜூன்19: நீடாமங்கலம் அருகில் உள்ள பொதக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வருபவர்களை கூத்தாநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இசிஜி எடுத்து வர சொல்கிறார்கள்.
எனவே இந்த பொதக்குடி அரசு மருத்துவ மனைக்கு பொதக்குடி, சேகரை,அதங்குடி, ஆய்குடி,வெள்ளக்குடி,விழல்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து தினந்தோறும் அதிக நோயாளிகள் வந்து செல்வதால் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அரசு மருத்துவ மனைக்கு இசிஜிசேவையை தொடங்கவேண்டும் என சமூக ஆர்வலர் ஜீயாவுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.