×

கலந்தாய்வு கூட்டத்தில் தகவல் அரியலூரில் 28ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஜூன் 19: அரியலூர் மாவட்டக ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, கூடுதல் ஓய்வூதியம், திருந்திய ஓய்வூதியம் போன்ற தங்களது குறைகளை ஓய்வூதியர்கள் தெளிவாக குறிப்பிட்டு மாதாந்திர ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்ட விண்ணப்பம் என தலைப்பிட்டு மாவட்ட கருவூல அலுவலர், அரியலூர் என்ற முகவரிக்கு வரும் 24ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அரியலூர் மாவட்ட கருவூல அலுவலரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து ஆணைகள் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்படும். மேலும் கூட்டத்தின்போது ஓய்வூதிய விவரங்களை புத்தகத்தில் பதிவு செய்தல், நாமினேஷன் தாக்கல் செய்தல், வருமானவரி படிவம் 16 வழங்குதல், புதிய மருந்துவ காப்பீடு, அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறுதல் போன்ற சேவைகளையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Pensioners ,meeting ,Ariyalur ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்