×

மயிலாடுதுறை அருகே ஓட்டல் சுவரை இடித்த 30 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை, ஜூன் 19: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் முக்கூட்டு ஈவேரா தெருவிற்கு செல்லும் வழியில் ஓட்டல் நடத்திவரும் ஆறுமுகம் என்பவரது காம்ப்பவுன்ட் சுவரை 30 நபர்கள் பொக்லைன் கொண்டு இடித்து பொதுவழியை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி வெண்ணிலா(40) செம்பனார்கோவில் போலீசில்ல் அளித்த புகாரில், எங்களுக்கு சொந்தமான காம்ப்பவுன்ட் சுற்றை ஆக்கூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராதாகிருஷ்ணன், தண்டபானி, வரலட்சுமி, உத்தரமூர்த்தி, கலியபெருமாள், ராமகிருஷ்ணன், பாலசந்திரன், பரசுராமன், ராமச்சந்திரன் உட்பட மேலும் 20 சேர்ந்துகொண்டு அத்துமீறி இடித்தனர்,

கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை உடைத்து சேதப்படுத்திவிட்டனர் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.போலீசார் கும்பலாக சேர்ந்து அத்துமீறி நுழைந்து தனியார் சொத்தை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்த சம்பவத்தில் பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : wall ,Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...