×

மாணவியிடம் செல்போன் பறிப்பு

திருவொற்றியூர், ஜூன் 19: திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த ரமேஷ் மகள் புனிதவள்ளி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை யோகா வகுப்பு செல்ல திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் அருகே தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், புனிதவள்ளி கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு  தப்பினர்.இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தாங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...