×

ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

நெல்லை, ஜூன் 19: கல்லிடைக்குறிச்சி சித்ரா தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் மணி, வீரவநல்லூர் டிடிடிஏ தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் முருகன் ஆகியோர் பணி ஓய்வுபெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா, சேரன்மகாதேவி யூனியன் கூட்டரங்கில் நடந்தது. பிடிஓக்கள் ருக்மணி, விஜயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். அலுவலக மேனேஜர் ராஜேஸ்வரன், சத்துணவு மேனேஜர் முன்னிலை வகித்தனர். சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைப்பாளர் பரந்தாமன் வரவேற்றார். பத்தமடை பள்ளி அமைப்பாளர் சொர்ணம், கல்லிடைக்குறிச்சி சரஸ்வதி தொடக்கப்பள்ளி அமைப்பாளர் செய்யதலி பாத்திமா, புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைப்பாளர் ஜெஸிந்தாராணி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். சக்திகுளம் கமிட்டி அரிசன தொடக்கப்பள்ளி அமைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.  பணி ஓய்வுபெற்ற மணி, முருகன் ஏற்புரை வழங்கினர். இவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போல் சத்துணவு பணியாளர்களுக்கும் மாத இறுதியில் சம்பளம் வழங்கி வரும் வட்டார வளர்ச்சி அதிகாரி, சத்துணவு மேனேஜர் மற்றும் சத்துணவு பிரிவு எழுத்தர் கங்காதரன் ஆகியோருக்கு பணியாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.  

Tags : nurse organizers ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது