தென்காசி, ஜூன் 19: தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமராஜா, பொருளாளர் ராஜேஷ்ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, 21ம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநில தலைவர் மற்றும் கோட்ட அமைப்பு செயலாளர் வழிகாட்டுதலின்படி புதிய பார்வையாளர்களாக கடையம், பாப்பாக்குடிக்கு மாறவர்மன், முக்கூடல் - பாலமுருகன், ஆலங்குளம் ஒன்றியம், நகரம்- முருகேசன், கீழப்பாவூர் ஒன்றியம், நகரம்- அருள்செல்வன், தென்காசி ஒன்றியம், நகரம் -ராஜேஷ், செங்கோட்டை ஒன்றியம், நகரம், புதூர் - ராமநாதன், கடையநல்லூர் ஒன்றியம், நகரம் - பாலகிருஷ்ணன், மேலகரம், இலஞ்சி, குற்றாலம் - செந்தூர்பாண்டியன், சுரண்டை, சாம்பவர்வடகரை - ஆறுமுகச்சாமி, வடகரை, பண்பொழி, அச்சன்புதூர் - வாசன், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் - பவுன்ராஜ், புளியங்குடி நகரம் ராமராஜா, சங்கை ஒன்றியம் ராதாகிருஷ்ணன், வாசு ஒன்றியம், நகரம், ராயகிரி, சிவகிரி - பாண்டித்துரை, மேலநீலிதநல்லூர் ஒன்றியம் முத்துப்பாண்டியன், சங்கை நகர், குருவிகுளம், திருவேங்கடம் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.