கைப்பிடி சுவர் இல்லாத கிணறால் விபத்து அபாயம்

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை சந்தோஷ்நகர் குடியிருப்பு பகுதியில் கைப்பிடி சுவர் இல்லாத  கிணறால் விபத்து அபாயம் நிலவுகிறது. புதுக்கோட்டை சந்தோஷ்நகர் மேற்கு குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் அருகிலே மிகவும் ஆபத்தான கைப்பிடி சுவர் இல்லாத கிணறு உள்ளது. இப்பகுதி குழந்தைகள் ஆபத்து இருப்பதை உணராமல் இதன் அருகில் விளையாடுகின்றனர். மேலும் ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளே விழும் நிலை உள்ளது. கிணற்றில் தண்ணீர் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணற்று உரிமையாளரிடம் பேசி சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: