×

அனைத்து பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு

வேலூர், ஜூன் 19: அனைத்து பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்தாக பள்ளி கல்வி மேலாண்மை இணையதளம் (இஎம்ஐஎஸ்) என்ற திட்டத்தை கடந்த 2011ம் ஆண்டு அரசு தொடங்கியது. இந்த இணையதளத்தில் ஒன்று முதல் பிளஸ்2 வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பெயர், முகவரி, பள்ளி விவரம், பெற்றோர் விவரம் உள்ளிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் ரத்த வகை, எடை உயரம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் கூடுதலாக ஒவ்வொரு விவரமும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மற்றும் நிதியுதவி தனியார் பள்ளிகளில் இந்த 2019-2020ம் கல்வியாண்டில் பிரீகேஜி முதல் அனைத்து வகுப்புகளிலும் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பதிவிடப்படாத மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக பதிவிட வேண்டும். மற்ற பள்ளிகளிலிருந்து இருந்து மாறுதலில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்திலிருந்து பெற்று உரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் உரிய வகுப்பிற்கு முன்னேற்றம் அளிக்கப்படுள்ளதை உறுதி செய்ய வேண்டும். எனவே அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் அனைத்து பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : school authorities ,children ,schools ,IMIS ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...