சாலை விபத்தில் தொழிலாளி பலி

வானூர், ஜூன் 19: வானூர் தாலுகா கிளியனூர் அருகே உள்ள தேற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(60), விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிளியனூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: