×

குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

விக்கிரவாண்டி, ஜூன் 19: விக்கிரவாண்டி  அருகே ராதாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி  பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்-திருக்கனூர்  சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி விக்கிரவாண்டி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன்,  பிடிஓ., அறவாழி ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் அரசு உத்தரவை  மதிக்காமல், பொதுசாலையில் மறியல் செய்ததாக ராதாபுரத்தை சேர்ந்த முருகன், அய்யனார், சங்கர  நாராயணன், ராஜேந்திரன், முத்து. ராஜமாணிக்கம், சோழன் உள்ளிட்ட 40 பேர்  மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை