×

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கல்

கடலூர், ஜூன் 19:   கடலூர் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி முதல் ஜமாபந்தி(வருவாய் தீர்வாயம்) நடைபெற்று வருகிறது.  கடலூர் வட்டத்தை சேர்ந்த களையூர், இரண்டாயிரம் விளாகம், திருப்பாணம்பாக்கம், கரைமேடு, உள்ளேரிப்பட்டு, பள்ளிப்பட்டு, மலையபெருமாள்அகரம், நல்லாத்தூர், மேலக்குப்பம், தூக்கணம்பாக்கம், தென்னம்பாக்கம் பகுதிகளுக்கு கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இந்
நிகழ்ச்சியின் போது கடலூர் சார் ஆட்சியர் சரயூ, 15 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன்   கார்டுகளை வழங்கினார். புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்கள் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 85 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களில் நேற்று 15 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன.வட்டாட்டசியர் செல்லக்குமார், தலைமையகத்து வட்டாட்சியர் அசோகன், மண்டல துணை வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜேஷ்பாபு, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வசந்தி, தலைமை நில அளவர் திருமலை மற்றும் வருவாய் ஆய்வர்கள், இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்