×

பெண் தீக்குளித்து சாவு

கடலூர், ஜூன் 19:  கடலூர் செம்மங்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்(32). கூலித்தொழிலாளி. இவரின் மனைவி உஷா(28). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் உஷா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வலியால் கடும் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடலில் பற்றி எரிந்த நிலையில் வலி தாங்கமுடியாமல் அலறினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உஷா உயிரிழந்தார்.  இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்