×

ஜீவனாம்சம் கொடுக்க கணவர் மறுப்பு கலெக்டரிடம் பெண் புகார்

மதுரை, ஜூன் 18: மதுரை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் பரகத் நிஷா. இவர் நேற்று கலெக்டர் சாந்தகுமாரிடம் கொடுத்த புகார் மனுவில், ‘‘மதுரை ஜீவா நகர் ஜமாத்தில் எனக்கும், முகம்மது பாரூக் என்பவருக்கும் கடந்த 1990ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக எனது தந்தை பணம், நகை, சீர்வரிசை, சொத்து கொடுத்தனர். கணவன் மனைவியான எங்களுக்குள் சண்டை வந்தது. இதனால் பிரிந்து வாழ்ந்தோம். கடந்த 2015ல் மகிளா நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றேன். எனது சொத்து மற்றும் ஜீவாதாரத் தொகையை வழங்கும்படி கேட்டேன். அதனை ஜமாத் நிர்வாகிகள் பெற்றுத்தருவதாக கூறினர்.ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை எனக்கு பாத்தியப்பட்ட சொத்து மற்றும் ஜீவனாம்சத்தை முகம்மது பாருக் தர மறுக்கிறார். இதனை கேட்டால் என்னை அடித்து மிரட்டி வருகிறார். எனக்கு சேர வேண்டியவற்றை பெற்றுத்தந்து, அவர் மீது நடவடிக்கை வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.



Tags : denial collector ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...