×

வீட்டில் திருட்டு

மதுரை, ஜூன் 18: மதுரை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(73). இவர் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பாரத்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.30 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...