×

மணல் அள்ளிய லாரி பறிமுதல்

திருமங்கலம், ஜூன் 18: திருமங்கலம் அருகே குண்டாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.திருமங்கலம் அருகேயுள்ள நடுவக்கோட்டை குண்டாற்றில் மணல் அள்ளுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. எஸ்ஐ பக்ரூதின் பாரூக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது டிப்பர் லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசார் ஆவணங்களை சரிபார்த்த போது அரசு அனுமதி சீட்டு இன்றி திருட்டுத்தனமாக லாரியில் மணல் அள்ளியது தெரிய வந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சோழவந்தானை சேர்ந்த சண்முகவேலுவை(22) கைது செய்தனர்.நடமாடும் சிக்னல்களும் அவுட்மாட்டுத்தாவணி செக்போஸ்ட் பகுதியில் முதன் முறையாக நடமாடும் சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டது. இதுவும் வைக்கப்பட்ட 3 மாதங்களில் ஓரம் கட்டப்பட்டது. பழுதடைந்ததை சரி செய்யாமல் வைக்கப்பட்டதால் அதுவும் முற்றிலும் செயல் இழந்து விட்டது. இதனையும் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.



Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை