மானிய விலையில் சொட்டுநீர் பாசன கருவிகள்

அலங்காநல்லூர், ஜூன் 18: மதுரை மாவட்ட கிழக்கு வட்டார தோட்டக்கலை துறை சார்பில், 430 ஏக்கர் பரப்பளவில் 92 லட்சம் செலவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை பெறுவதற்கு மதுரை கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கள்ளந்திரி, அரும்பனூர், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதி சிறு,குறு மற்றும் இதர விவசாயிகள் தோட்டகலை பயிர் செய்வதற்கான ஆவணங்களுடன் வந்து பதிவுபெற்று பயன்பெறுமாறு உதவி இயக்குநர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Related Stories: