கடைகளில் ஆய்வு பிளாஸ்டிக் பைகள் 290 கிலோ பறிமுதல்

மதுரை, ஜூன் 18: மதுரை மாநகராட்சி பகுதியில் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பைகள் 290 கிலோவை பறிமுதல் செய்து, ரூ.51 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 4 மண்டலங்களில் தடை செய்த பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் கமிஷனர் விசாகன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் திடீரென சோதனைகளை நடத்தி பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. நேற்று மாநகராட்சி மண்டல பகுதிகளில் உள்ள 558 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 290 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.51 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: