24 மணிநேரமும் மது விற்பனை ஜோர்

ஒட்டன்சத்திரம், ஜூன் 18: ஒட்டன்சத்திரம் அருகே 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒட்டன்சத்திரத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களான வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, கோட்டைவெளி, சிறுவாட்டுக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக சமூகவிரோதிகள் மதுபானங்களை டாஸ்மாக்கில் வாங்கி, மலைப்பகுதிகளுக்கு கொண்டு வந்து, 24 மணி நேரமும் அதிக தொகைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மதுப்பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு சாலையில் அராஜகம் செய்கின்றனர். மேலும் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் விழுந்துவிடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: