திண்டுக்கல், ஜூன் 18: கொல்கத்தாவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து திண்டுக்கல்லில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் 520 மருத்துவமனைகளில் உள்ள 900 மருத்துவர்கள் நேற்று காலை 6 மணிமுதல் மருத்துவமனைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.