பழநி, பட்டிவீரன்பட்டியில் இன்று மின்தடை அறிவிப்பு

பழநி/பட்டிவீரன்பட்டி, ஜூன் 18: பழநி, பட்டிவீரன்பட்டியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் வழங்கும் பகுதிகளான பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம்

இருக்காது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதேபோல் மாதாந்திர பராமரிப்புப்பணியின் காரணமாக பழநியில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளது. பழநி உபமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இம்மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, சின்னக்கலையம்புத்தூர், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: