திருச்சி, ஜூன் 18: இரண்டாவது திருமணத்திற்கு பார்த்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் பெண்ணிடமிருந்து 25 பவுன் நகை மற்றும் ரூ.20லட்சத்தை வாங்கித்தரும்படி திருச்சி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தார்.சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்ததை அடுத்து, இரண்டாவது திருமணத்தை நிறுத்தி, நகை பணத்தை கேட்ட தனக்கு அப்பெண் கொலை மிரட்டல் விடுவதாகவும், தன்னிடம் வாங்கிய 25 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தார்.திருச்சி, கல்லுக்குழி ரயில்வே காலனியை சேர்ந்தவர் குஞ்சு மகன் வீரமணி (59). இவர் தெற்கு ரயில்வேக்குட்பட்ட திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கலாசியாக (செஞ்சர்) பணியாற்றி கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இவரது மனைவி கடந்த 1986ல் இறந்து விட்டார். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பிய வீரமணி, புரோக்கர்கள் மூலமாக வரன் தேடி வந்தார். சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ், டாக்டர் நடேசன் ரோடு பகுதியை சேர்ந்த சையத்ரஹ்மான்-ஜீனத் ஆகியோரின் மகள் ரேஸ்மா பேகம் என்பவர், வீரமணியை திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். ஆனால், ரேஸ்மாபேகம் தன்னிடமிருந்து 25 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக வீரமணி திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று மனு அளித்தார்.