திருச்சி, ஜூன் 18: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சிஐடியூ புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், புறநகர் மாவட்ட உள்ளாட்சி துறை ஊழியர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ராமசாமி, முருகசேன், சுப்ரமணி மற்றும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.