துறையூர், ஜூன் 18: உப்பிலியபுரம் அருகேயுள்ள ஒ.கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சாலையை சீரமைக்ககோரி துறையூர்-தம்மம்பட்டி சாலையில் உள்ள கைகாட்டியில் சாலை மறியல் செய்தனர்.துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஒ.கிருஷ்ணாபுரம் பிரிவு ரோட்டிலிருந்து கிராமம் வரை உள்ள சாலை மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாலையை செப்பனிடுவதற்காக பழைய தார்சாலையை பறித்து ஜல்லி பரப்பி மண்போட்டு செப்பனிடப்பட்டது. ஆனால் தார் ஊற்றவில்லை. தார் போடுவதாக கூறிய அதிகாரிகள் ஒரு வருடமாகியும் சரிசெய்யவில்லை. இதனால் தற்போது ஜல்லி ரோடும் பெயர்ந்து சாலை குண்டு, குழியுமாக இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாதபடி மோசமாக மாறிவிட்டது. இதனை பொதுமக்கள் பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை.