மதுரை கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்

திருச்சி, ஜூன் 18: மதுரை மாவட்டம் தல்லாக்குளம் பகுதியில் கடந்த 12ம் தேதி அஜீத் (23) என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிந்த தல்லாக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மதுரை தல்லாக்குளம் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த ரவி முத்தையா மகன் பிரபு (19) என்பவர் நேற்று திருச்சி ஜேஎம் 5 நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாலகிருஷ்ணன், 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பிரபு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: