தீ விபத்தில் கரும்பு தோட்டம் நாசம்

சங்கராபுரம், ஜூன் 18:   சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் இங்கர்சால்(52). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது கரும்பு வயல் தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஐயப்பன்(பொ) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அனைத்தனர். இதில் சுமார் 2ஏக்கர் கரும்பு எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு 4 லட்சமாகும்.

Related Stories: