தீக்குளித்த இளம்பெண் சாவு

திண்டிவனம், ஜூன் 18:  திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் மனைவி சரண்யா (25), விவசாயி. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, தன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அலறித்துடித்த அவரை உறவினர்கள் மீட்டு, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். திருமணமாகி இரண்டு வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.

Related Stories: