மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, ஜூன் 18:  உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் காவலநிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆசனூர் மற்றும் மலையனூர் கிராமங்களில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நூர்தீன்(49), செல்வம்(42), வெங்கடேசன்(30) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: