வக்ரகாளி கோயிலில் பவுர்ணமி பூஜை

வானூர், ஜூன் 18:   வானூர் தாலுகா திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.  திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சந்திரமவுளீஸ்வரர் மற்றும் வக்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதாந்திர பவுர்ணமி பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடந்தது. இதனையொட்டி காலையில் வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மதியம் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் விளக்கு பூஜையும் நள்ளிரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும் நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழுப்புரம் மற்றும் வானூர் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: