காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது தீ விபத்து: 2 கூரை வீடு எரிந்து நாசம்

ரிஷிவந்தியம், ஜூன் 18:    ரிஷிவந்தியம் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து நாசமானது. ரிஷிவந்தியம் அருகே முனிவாழை கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அரசன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக இவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் அருகில் இருந்த கலியபெருமாள் மனைவி குப்பம்மாள் என்பவரது கூரை வீட்டிலும் தீ பரவியது.  இதுகுறித்து தியாகதுருகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் 2 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும்.

Related Stories: