ஓமலூர், ஜூன் 18: ஓமலூர் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை (19ம்தேதி) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஓமலூர் கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓமலூர் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (19ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1மணி வரை நடக்கிறது. மேட்டூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு, மின்சாரம் தொடர்பான தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.