மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 18:

பூதலூர் அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பூதலூர் கொடும்புரார் காலனியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் நேற்று காலை வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், முருகேசனை பிடித்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல அதே தெருவை சேர்ந்த அன்பு (45) என்பவர் வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்று கொண்டிருந்தார். அப்போது அவரிடமிருந்து 7 மதுபாட்டில் பறிமுதல் செய்தனர். மேலும் பூதலூர் அய்யனாபுரம் ரோட்டை சேர்ந்த செல்வி (55) என்பவர் வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தார். அப்போது அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.வாலிபரை தாக்கியவர் கைது: பூதலூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.பூதலூர் அருகே நந்தவனப்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த ராஜ் மகன் சூரியா (25). அதே தெருவை சேர்ந்த அந்தோணிதாசுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சூரியாவை அந்தோணிதாஸ், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து பூதலூர் போலீசில் சூரியா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து அந்தோணிதாசை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories: