×

வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், ஜூன் 18 : நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி ஆணையர் ரௌஷன் கஸ்யப் விடுத்துள்ள அறிக்கை: வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர் கூட்டம் வருகிற ஜூலை 10ம் தேதி நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடக்கிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர், தொழிலாளர்களுக்கும், மதியம் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் நிறுவனங்களுக்கும் நடக்கிறது. இந்த நாளில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தொழில் நிறுவனங்கள் பி.எப் பணம் கட்டுவது, உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு செய்வது, புதிய உறுப்பினர்களை வைப்பு நிதியில் சேர்த்துக்கொள்வது தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தங்களது சந்ேதகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மண்டல ஆணையரை நேரில் சந்திக்க விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகிற 5ம் தேதிக்குள் அலுவலக வரவேற்பு அறையில் நேரிலோ அல்லது வருங்கால வைப்பு நிதி ஆணையரின் முகவரிக்கு தபால் மூலமாகவோ அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

Tags : Future Deposit Fund Oversight Meeting ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி