×

செங்கம் அருகே மழை வேண்டி ஏரியில் சிறப்பு பூஜை களி, கருவாடு படையலிட்டு வழிபாடு

செங்கம், ஜூன் 18: செங்கம் அருகே பொதுமக்கள் மழை வேண்டி ஏரியில் சிறப்பு பூஜை செய்தும், களி, கருவாடு படையலிட்டு வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால், பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏரி, குளம், கிணறுகளில் தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காக சாலை மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு கிராமங்களில் மழை வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன்படி, செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தில் நேற்று கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு மழை வேண்டி ஏரியில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது, களி, கருவாடு படையலிட்டு வழிபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Special ,lake ,Pooja ,Sentham ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...