மதுரை, ஜூன் 14: மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே செல்லூர் முதல் படித்துறை வரையிலும் அருள்தாஸ்புரம் முதல் ஆரப்பாளையம் வரையிலும் கரைகளை இணைக்கும் வகையில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தது. இதனை இடித்து விட்டு 2 உயர்மட்ட பாலங்களை நகர் ஊரமைப்புத்துறை போக்குவரத்து மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கதுறை சார்பில் கட்ட திட்டமிடப்பட்டது. அந்த வகையில் செல்லூர்-படித்துறை இடையே ரூ.15.01 கோடி செலவிலும், ஆரப்பாளையம்-அருள்தாஸ்புரம் இடையே ரூ.16.17 கோடி செலவிலும் என மொத்தம் ரூ.30.40 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014ல் கட்டப்பட்டது. அப்போதே மேலும் 2 உயர்மட்டப்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.