மதுரை மாவட்டத்தில் 3 தாலுகாவில் ஜமாபந்தி இன்றுடன் முடிகிறது

மதுரை, ஜூன் 14: மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவிலும், கிராம நிர்வாக அலுவலர்களின் வருவாய் கணக்குகளை சரிபார்க்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும். மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி துவங்கிய ஜமாபந்தி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று 3வது நாளாக பேரையூர் தாலுகாவில், மேலத்திருமாணிக்கம், சீல்நாயக்கன்பட்டி, எழுமலை, உத்தப்புரம், மல்லபுரம், சூலப்புரம், தாடையம்பட்டி, கோட்டைப்பட்டியிலும்,

வாடிப்பட்டி தாலுகாவில் சின்ன இலந்தைகுளம், கொண்டையம்பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வேலிப்பட்டி, குட்டிபேய்கிபட்டிக்கும்.

மதுரை வடக்கு தாலுகாவில் தேனூர், தோடனேரி, வைரவநத்தம், வயலூர், அரியூர், சிறுவாலை, சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், கள்ளிக்குடி, கீழநெடுங்குளத்திற்கும்.

கள்ளிக்குடி தாலுகாவில், செங்கப்படை, சுவாமிமல்லம்பட்டி, கரிசல்காளாம்பட்டி, கீழநேசநேரி, உலகாணி, நெடுங்குளம், அச்சங்குளம், கூடக்கோயில், கல்லணை, தும்பக்குளம், டி.அரசபட்டி, சிவரக்கோட்டைக்கும். மதுரை தெற்கு தாலுகாவில், கீழ்மதுரை, ஐராவதநல்லூர், பிராகுடி, விரகனூர், வில்லாபுரம், புளியங்குளம், சிலைமானுக்கும். .

மதுரை மேற்கு தாலுகாவில், அச்சம்பத்து, ஏற்குடி, கோச்சடை, ஆரப்பாளையம், பொன்மேனி, கொக்குளப்பி, மேல்மதுரைக்கும். திருமங்கலம் தாலுகாவில், தங்களாச்சேரி, திரளி, மதிப்பனூர், அலப்பளச்சேரி, சௌடார்பட்டி, பொக்கம்பட்டி, பன்னிக்குண்டு, அம்மாபட்டி, கீழவனேரி, பொன்னம்பட்டி, புதுப்பட்டி, நடுவக்கோட்டைக்கும். திருப்பரங்குன்றம் தாலுகாவில், எலியார்பத்தி, பாரப்பத்தி, பெரியகூடக்கோயில், கொம்பாடி, ஓ.ஆலங்குளம், தொட்டியபட்டி, வலையப்பட்டி, பெருங்குடி, வலையங்குளத்திற்கும்.

மதுரை கிழக்கு தாலுகாவில், கொடிக்குளம், ராஜகம்பீரம், பொடச்சுப்பட்டி, காளிகாப்பான், உலகனேரி, இலந்தைக்குளம், திருமோகூர், வீரபாஞ்சான், உத்தங்குடி, மங்களகுடிக்கும். மேலூர் தாலுகாவில், சுக்காம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, அட்டப்பட்டி, கச்சிராயன்பட்டி, கொடுக்கம்பட்டிக்கும்,

உசிலம்பட்டி தாகாவில், செம்பட்டி, வேப்பனூத்து, திடியன், நாட்டார்மங்கலம், சிந்துபட்டி, தும்மக்குண்டு, பொட்டுலுப்பட்டி, பூதிப்புரம், ஆரியப்பட்டிக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இன்றுடன் மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு ஆகிய தாலுகாவில் ஜமாபந்தி முடிவடைகிறது.

இந்த தாலுகாக்களில் நூற்றுக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன.

Related Stories: