×

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், ஜூன் 14:  பத்ம விருதுக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர்  மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருது வழங்க அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணியாற்றியவர்களுக்கு வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தினவிழா  பத்ம விருதுகள் வாங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

 விவரங்கள் அறிய www.padmaawards.gov.im என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து வரும் 20ம் தேதிக்குள் திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு தகுதியுள்ளவர்கள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும், தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு