ஈரோடு, ஜூன் 14: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வினிசா தலைமையில் முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பள்ளிகளை ஆய்வு செய்து, அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.