×

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு

ஈரோடு, ஜூன் 14:  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வினிசா தலைமையில் முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பள்ளிகளை ஆய்வு செய்து, அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2018-2019ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.எனவே, அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.


Tags : Indian Students Union ,
× RELATED பெரியார் பல்கலை. துணை வேந்தர்,...