ஈரோடு, ஜூன் 14: ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கரும்பு, நெல், தென்னை ஆகியவற்றிக்கு அடுத்தபடியாக எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக, நடப்பாண்டில் பரவலாக மழை பெய்ததாலும், கீழ்பவானியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் எள், நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் எண்ணெய் வித்துக்களை உலர்த்த வசதியாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சார்பில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு உலர்களம் அமைத்து கொடுக்கப்பட்டது.தலா ரூ.2.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உலர்களங்கள் பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் உலர்களங்கள் இருந்ததற்கான அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.