இடப்பிரச்னையில் முதியவரை தாக்கியவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 14: பூதலூர் அருகே இடப்பிரச்னையில் முதியவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பூதலூர் அருகே பெரிய காங்கேயம்பட்டி மேலத்தெரு சொக்கையா மகன் அன்பழகன் (59). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்திக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பிரச்னையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கலியமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் பிரபு, இளையராஜா ஆகியோர் அன்பழகனை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அன்பழகன், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பூதலூர் போலீசில் அன்பழகன் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிந்து இளையராஜாவை கைது செய்தார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்.

Related Stories: