×

கண்டுகொள்ளாத அதிகாரிகள் புதுகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை, ஜூன் 14: புதுகை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது.இந்த பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்திட தேவையான பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர போட்டி இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி.. தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உள்ள அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு தேவையான இலவச பயிற்சி வகுப்புகளை இந்த அவலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வரும் 19ம் தேதி முதல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடத்த உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நடத்திட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், இதுபோன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி வகுப்புகளின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Examination ,Job Offices ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்