×

19ம் தேதி துவக்கம் மாடு முட்டி முதியவர் பலி

கந்தர்வகோட்டை, ஜூன் 14: கந்தர்வகோட்டையை வடுகப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன்(60). இவர் நேற்று கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த காளை மாடு அவரை பலமாக முட்டி தள்ளியது. தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாராயணன் பரிதாபமாக இறந்தார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா