கோவில்பட்டி, ஜூன் 14: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அமுதா தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அமுதா தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். அதாவது இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்றும், 14 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தாசில்தார் பரமசிவன், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சுரேஷ், தேர்தல் துணை தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் தினகரன் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் திரளாகப் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.