ஊத்துமலையில் இன்று யாதவர் திருமண மகால் திறப்பு விழா

நெல்லை, ஜூன் 14:  ஊத்துமலையில் பழைய காவல்நிலையம் அருகே, யாதவர் சமுதாய திருமண மகால் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, இன்று (14ம் தேதி) நடக்கிறது. நாட்டாமை மருதையா தலைமை வகிக்கிறார். கோட்டைச்சாமி, மானிஷா நிறைகுளத்தான் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அனைத்து மத, சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். மதியம் அன்னதானம், இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.  ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பரிமளச்செல்வன், முருகேசன், செல்லையா கோனார், அலெக்சாண்டர், ராசா என்கிற முத்தையா கோனார், ராமச்சந்திரன், சண்முகையா கோனார், முத்துப்பாண்டி, சுந்தர், முருகன் ஆகியோர் செய்து உள்ளனர்.

Related Stories: