வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் மாயம்

சிவகிரி, ஜூன் 14:  வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  வாசுதேவநல்லூர் அம்பேத்கர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜ் (47). இவர், இங்குள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பிட்டராக வேைல செய்து வருகிறார். இவருக்கு ராணி (37) என்ற மனைவியும், அலெக்ஸ் (18) என்ற மகனும், பிரின்ஸி (16) என்ற மகளும் உள்ளனர். கடந்த 11ம் தேதி இரவு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, ராணி பீரோவை திறந்து நகைகளை எடுக்கச் சென்றார். அப்போது நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 9 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டி மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜ், வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். சிறப்பு எஸ்ஐ மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: